Sunday, November 6, 2011

தேவையா?


போக்குவரத்துப்
பாதைகளும்
நாக்கு வறளாமல்
நல்ல குடிநீரும்
நாட்டுமக்களுக்கு நல்குவது
அரசாங்கத்தின் கடமை;
இதைப்போய் ஏன்
விளம்பரப்படுத்துகிறார்கள் டி.வி.யில்?
கிராமங்கள் அன்னியநாடா
தர்மம் செய்கிறார்களா அதற்கு?

**********************************


மாற்றங்கள்


அடுக்களையைப்
புகலிடமாகக்கொண்டு
அன்று
ஆண் பார்வையின் கீழ்
வாழ்ந்தாள் பெண்.
தவறை வௌ¤ப்படுத்தாத
ஆண் உடல்,
குற்றத்தில் சிக்கிக்கொள்ளும்
பெண்தேகம்.
அகப்பட்டுக் கொள்வதால்
அடி, உதை, அடிமைசாசனம், வீட்டுக்கைதி.
இன்று நடக்குமா?

பொருள் ஈட்டுவதிலும்
பெறாமல் தடுத்துக் கொள்வதிலும்
திறமை பெற்றுவிட்ட பிறகு
அவளூக்கு
நன்நடத்தைக் காவலனாகத்
தன்னைத்தானே நியமித்துக் கொள்வது
சாத்தியப்படுமா ஆண்களுக்கு?

No comments: