டாக்டர் வர்க்கி அம்மாள்
அவர் கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் உத்தியோகம் ஏற்று தாராபுரம் வந்தபோது அவருக்கு வயது சுமார் 25க்குள்தான் இருக்கும். கேரளத்தைச் சேர்ந்தவர். நல்ல நிறம். அத்துடன் அழகும் கூட, பிறருடன் நேசமாகப் பழகும் முறையால் தனவந்தர் வீட்டுப் பெண்கள்கூட சர்க்கார் ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க விரும்பிவருவார்கள்.வெகு சீக்கிரத்திலேயே அவர் ஊர்க்காரர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவராகிவிட்டார்.அவருடைய வீட்டில் அவரிரண்டாவது மகள். மூத்தவளுக்கு விவாகமாகி புருஷன் வீடு சென்றுவிட்டாள். தம்பிகள் இருவர். விதவைத்தாயார்.
அப்போதெல்லாம் (1940கள்) கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் ஆண்டாக்டர் ஒருவரும் பெண் டாக்டர் ஒருவரும் பணிபுரிவார்கள். ஆண் டாக்டர் உடன் பணிசெய்யும் பெண் டாக்டரிடம் மிகவும் பண்புடனும் நேசமுடனும் பழகுவார். சில வருடங்கள் சென்றன. அந்த ஆண் டாக்டர் மாற்றலாகி வேறு ஊருக்குச்சென்றுவிட்டார். புதிதாக் ஒரு ஆண் டாக்டர் வந்தார். அவரும் நடுவயதுக்காரர்தான். குடும்பம் குழந்தைகள் எல்லாம் உண்டு. அவருக்கும் கேரளா தான். அவர் வர்க்கி டாக்டரிடம் தரக்குறைவாக நடந்துகொள்வதாகவும் அதனால் இருவருக்கும் சச்சரவு உண்டாவதாக ஊரில் பேச்சு அடிபட்டது. ஆண்டாக்டர் வீட்டின்மீது இரவில் கற்கள் வீசப்பட்டன.
நயம், பயம் எவற்றாலும் வசப்படாத பெண்டாக்டர் மேல் மேலிடத்துக்குப் புகார் எழுதி அவரை வேறு ஊருக்கு மாற்ற அந்த டாக்டர் செயல்பட்டார். ஆனால் ஊர் மக்கள் பெண் டாக்டரை மாற்றக்கூடாது என்று மனுஎழுதிக் கையெழுத்துப்போட்டு அனுப்பியதால் மாற்ரல் உத்திரவு ரத்தாகிவிட்டது. ஆனால் பெண்டாக்டரால் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் வேலை செய்ய முடியவில்லை. ஊரில் வேண்டப்பற்றவர் களிடம் தனது நிலையை அவர் விளக்கினார். ஊர்மக்கள் ‘நீங்கள் எங்கும்போகக்கூடாது. இந்த ஊரிலேயே தனியாக ஆஸ்பத்திரி தொடங்குங்கள். நாங்கள் அதை நல்லமுறையில் கவனித்துக்கொள்வோம்' என்று உறுதி சொன்னதன் பேரில் அவர் ‘ஐடாஸ்கடர்' என்னும் பெயரில் தனி ஆஸ்பத்திரி தொடங்கினார். வேலூரில் ‘ஐடாஸ்கடர்' என்ற பிரபல டாக்டரிடம் மருத்துவம் கற்ரவர் என்றும் தன் குருவின் பெயரை ஆஸ்பத்திரிக்கு வைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஆரம்பகாலத்தில் டாக்டரம்மா சாதாரணமான ஒரு வீட்டில்தான் வசித்தார். அப்போதெல்லாம் அவரிடம் கார் கிடையாது. அந்த நாட்களில் அவர் மெலிந்த உடல் கொண்டவராகத்தான் இருந்தார். பின்னர்தான் உடல் பருத்துப் போனார். வைத்தியத்திற்கு தங்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்ல வசதிக்கெற்ப குதிரை வண்டியோ, வாடகைக்காரோ கொண்டு சென்று அவரைக் கூட்டிவருவார்கள். சில வருடங்களுக்குப் பிறகு வர்க்கியம்மாளோடு கடோத்கஜன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவன் அவரது மருந்துப்பெட்டியைத் தூக்கியபடி வரத்தொடங்கினான். அவன் டாக்டரின் மெய்க்காப்பாளன்போல செயல்ப்பட்டான். டாக்டர் அவனை ‘சாரே' என்று அழைத்தலால் எல்லோருக்கும் அவன் ‘சாரே'தான். அவனும் ஒரு மலையாளிதான்.
ஒரு சமயம் டாக்டரம்மாவை பக்கத்து கிராமத்துப் பணக்காரர் தன் மனைவிக்கு பிரசவ வலியென்று சொல்லி கார்வைத்துக் கூட்டிச்சென்றாராம். தன் வீட்டில் ஒரு அறையைக் காட்டி உள்ளே அழைத்துப் போனாராம். முனேற்பாட்டின்படி அறையை வெளியே தாளிட்டுவிட்டு டாக்டரைக் கெடுத்துவிட்டாராம். நடந்ததை வெளியில் சொன்னால் கொலைவிழும் என்று அச்சுறுத்தி அனுப்பினாராம். அதன் பிறகுதான் டாக்டரம்மா தங்கள் ஊரான கேரளத்திலிருந்து இந்த ‘சாரே' வைத் தருவித்து உடன்வைத்துக் கொண்டாராம் இப்படி ஊரில் பேச்சு அடிபட்டது. டாக்டரம்மா கார் வாங்கியபின் ‘சாரே'தான் அதை ஓட்டுபவராகச் செயல்பட்டான்
அவர் கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் உத்தியோகம் ஏற்று தாராபுரம் வந்தபோது அவருக்கு வயது சுமார் 25க்குள்தான் இருக்கும். கேரளத்தைச் சேர்ந்தவர். நல்ல நிறம். அத்துடன் அழகும் கூட, பிறருடன் நேசமாகப் பழகும் முறையால் தனவந்தர் வீட்டுப் பெண்கள்கூட சர்க்கார் ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க விரும்பிவருவார்கள்.வெகு சீக்கிரத்திலேயே அவர் ஊர்க்காரர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவராகிவிட்டார்.அவருடைய வீட்டில் அவரிரண்டாவது மகள். மூத்தவளுக்கு விவாகமாகி புருஷன் வீடு சென்றுவிட்டாள். தம்பிகள் இருவர். விதவைத்தாயார்.
அப்போதெல்லாம் (1940கள்) கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் ஆண்டாக்டர் ஒருவரும் பெண் டாக்டர் ஒருவரும் பணிபுரிவார்கள். ஆண் டாக்டர் உடன் பணிசெய்யும் பெண் டாக்டரிடம் மிகவும் பண்புடனும் நேசமுடனும் பழகுவார். சில வருடங்கள் சென்றன. அந்த ஆண் டாக்டர் மாற்றலாகி வேறு ஊருக்குச்சென்றுவிட்டார். புதிதாக் ஒரு ஆண் டாக்டர் வந்தார். அவரும் நடுவயதுக்காரர்தான். குடும்பம் குழந்தைகள் எல்லாம் உண்டு. அவருக்கும் கேரளா தான். அவர் வர்க்கி டாக்டரிடம் தரக்குறைவாக நடந்துகொள்வதாகவும் அதனால் இருவருக்கும் சச்சரவு உண்டாவதாக ஊரில் பேச்சு அடிபட்டது. ஆண்டாக்டர் வீட்டின்மீது இரவில் கற்கள் வீசப்பட்டன.
நயம், பயம் எவற்றாலும் வசப்படாத பெண்டாக்டர் மேல் மேலிடத்துக்குப் புகார் எழுதி அவரை வேறு ஊருக்கு மாற்ற அந்த டாக்டர் செயல்பட்டார். ஆனால் ஊர் மக்கள் பெண் டாக்டரை மாற்றக்கூடாது என்று மனுஎழுதிக் கையெழுத்துப்போட்டு அனுப்பியதால் மாற்ரல் உத்திரவு ரத்தாகிவிட்டது. ஆனால் பெண்டாக்டரால் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் வேலை செய்ய முடியவில்லை. ஊரில் வேண்டப்பற்றவர் களிடம் தனது நிலையை அவர் விளக்கினார். ஊர்மக்கள் ‘நீங்கள் எங்கும்போகக்கூடாது. இந்த ஊரிலேயே தனியாக ஆஸ்பத்திரி தொடங்குங்கள். நாங்கள் அதை நல்லமுறையில் கவனித்துக்கொள்வோம்' என்று உறுதி சொன்னதன் பேரில் அவர் ‘ஐடாஸ்கடர்' என்னும் பெயரில் தனி ஆஸ்பத்திரி தொடங்கினார். வேலூரில் ‘ஐடாஸ்கடர்' என்ற பிரபல டாக்டரிடம் மருத்துவம் கற்ரவர் என்றும் தன் குருவின் பெயரை ஆஸ்பத்திரிக்கு வைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஆரம்பகாலத்தில் டாக்டரம்மா சாதாரணமான ஒரு வீட்டில்தான் வசித்தார். அப்போதெல்லாம் அவரிடம் கார் கிடையாது. அந்த நாட்களில் அவர் மெலிந்த உடல் கொண்டவராகத்தான் இருந்தார். பின்னர்தான் உடல் பருத்துப் போனார். வைத்தியத்திற்கு தங்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்ல வசதிக்கெற்ப குதிரை வண்டியோ, வாடகைக்காரோ கொண்டு சென்று அவரைக் கூட்டிவருவார்கள். சில வருடங்களுக்குப் பிறகு வர்க்கியம்மாளோடு கடோத்கஜன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவன் அவரது மருந்துப்பெட்டியைத் தூக்கியபடி வரத்தொடங்கினான். அவன் டாக்டரின் மெய்க்காப்பாளன்போல செயல்ப்பட்டான். டாக்டர் அவனை ‘சாரே' என்று அழைத்தலால் எல்லோருக்கும் அவன் ‘சாரே'தான். அவனும் ஒரு மலையாளிதான்.
ஒரு சமயம் டாக்டரம்மாவை பக்கத்து கிராமத்துப் பணக்காரர் தன் மனைவிக்கு பிரசவ வலியென்று சொல்லி கார்வைத்துக் கூட்டிச்சென்றாராம். தன் வீட்டில் ஒரு அறையைக் காட்டி உள்ளே அழைத்துப் போனாராம். முனேற்பாட்டின்படி அறையை வெளியே தாளிட்டுவிட்டு டாக்டரைக் கெடுத்துவிட்டாராம். நடந்ததை வெளியில் சொன்னால் கொலைவிழும் என்று அச்சுறுத்தி அனுப்பினாராம். அதன் பிறகுதான் டாக்டரம்மா தங்கள் ஊரான கேரளத்திலிருந்து இந்த ‘சாரே' வைத் தருவித்து உடன்வைத்துக் கொண்டாராம் இப்படி ஊரில் பேச்சு அடிபட்டது. டாக்டரம்மா கார் வாங்கியபின் ‘சாரே'தான் அதை ஓட்டுபவராகச் செயல்பட்டான்
No comments:
Post a Comment