Saturday, October 6, 2007

01-மனக் கருவூலத்திலிருந்து

சாமியும் பூதமும்
மனிதர்கள் பேசும்போது சில சமயங்களில் கேட்டதுண்டு, "சாமியாவது பூத மாவது! ஒன்றும் கிடையாது" என்று. இதிலிருந்து தெரிவது சாமி வேறு பூதம் வேறு என்பதுதான். சாமி என்பது தெய்வீகத்தையும், பூதம் என்பது பௌதீ கத்தையும் குறிக்கிறது. பௌதீகம் தெய்வீகமாக முடியாது.
தெய்வம் என்னும் சொல் சத்தியத்தைக் குறிக்கும். சத்தியம், நிஜம், எல்லாம் ஒரே அர்த்தத்தில் உபயோகப்படுகிறது. அது ஒன்றாகத்தான் இருக்குமே யன்றி பலவாக இருக்க முடியாது. கையால் தெய்வங்கள் பல என நினைப்பது தவறு.
சத்தியம் உணரப்படும் பொருளே தவிர அறியப்படும் பொருள் அன்று. உண்மையில் 'நான்' என்பது ஒரே வஸ்துதான். அது 'நாம்' என்னும் பன்மை அல்ல. ஆனால், 'நான், நீ, அவன்' என்று பலவாறாக இருக்கிறோமே அது எப்படி? என்று கேட்கலாம் அது இயற்கையின் செயலான பௌதீகத்தினால் தான்.
சூரியன் எப்படி உஷ்ணமும் ஒளியும் உடையதாக இருக்கிறதோ அதுபோல சத்தியத்திடமிருந்து அறிவும், ஆற்றலும் வெளிப்படுகிறது. இயற்கையானது அந்த அறிவையும் ற்றலையும் கைபற்றி, பஞ்ச பூதங்களான மண், நெருப்பு, நீர், காற்று, காயங்களை உண்டாக்கி, அவைகளின் மூலம் பௌதீக உலகையும் படைக்கிறது. அந்த பௌதீக உலகில் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசிகளுக் கெல்லாம் 'மனம்' என்னும் நுண்ணிய அமைப்பையும் உண்டுபண்ணுகிறது. அந்த ஜீவராசி களின் பல மனங்களிலும் ஏகமான 'நான்' என்னும் சத்தியத்தின் பிரதிபலிப்பாக அறிவும் ஆற்றலும் பிரதிபலிக்கின்றன.
முகம் பார்க்கும் கண்ணாடியை சூரியன் முன் சாய்வாகக் காட்டினால் அதற்குள்ளிருந்து சூரிய ஒளியும் உஷ்ணமும் பிரதிபலிப்பதுபோல உயிர்களின் மனங்களின் அமைப்புக்கேற்ப சத்தியத்தின் அறிவும் ற்றலும் பிரதிபலிக்கின்றன. அவை பல 'நான்'களாக உருவெடுக்கின்றன.
உடலும் உயிரும்
--------------------
உயிரை ஜீவன் என்றும் ஜீவாத்மா என்றும் சொல்கிறார்கள், சத்தியமான பிரும்மத்தைப் 'பரமன்' என்றும் சொல்கிறார்கள். உடலோடு கூடிய உயிர் ஜீவாத்மா எனப்படுகிறது. உடலற்ற உயிரைக் காணவோ அறியவோ முடியாது. நாம் மனிதர்களைப் பற்றிச் சொல்லும்போது, 'அவன் கருப்பு; இவள் குட்டை' என்று குறிப்பிடுகிறோம். உண்மையில் கருப்பாகவோ குட்டையா கவோ இருப்பது உடலேயன்றி ஜீவனல்ல. நரை ,திரை, மூப்பு, சாவு முதலிய எல்லா விவகாரங்களும் உடலைப் பொருத்ததே; உயிருக்கு எவ்வித மாற்ற மும் கிடையாது.
ஒரு வீட்டைக் கட்டிய ஒருவனிடம் 'இது யார் வீடு?' என்று கேட்கிறோம் என்பதாக வைத்துக்கொள். அவன் 'இது என்வீடு' என்று சொல்வானே தவிர 'நான் வீடு' என்று உரைக்க மாட்டான். அதுபோல நாமும் 'இது என் உடம்பு' என்று கூறுவோமேயன்றி 'நான் உடம்பு' என்று சொல்ல மாட்டோம். இப்படி சொல்லிக் கொண்டே போவோமானால் 'என் உடம்பு, என் மனசு, என் அறிவு, என் உயிர்' என்பதாக 'நான்' என்ற ஒரு பொருளுக்குச் சொந்தமாக்கப் படுகிறது. அந்த 'நான்' யார்?
இதுதான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் உபதேச சாரமும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசமுமாகும். இந்த உடலை 'நான்' என்று மயங்குவதைத்தான் "தேகாத்ம புத்தி" என்று வேதாந்தத்தில் சொல்லப்படுகிறது (உடலை நான் என்று தவறாக நினப்பது). மின்சாரம் செயல்பட வேணுமென்றால் 'பல்பு, டி.வி., பேன்,' போன்ற பொருள்களும், அவற்றை இயக்கும் ஸ்விச்சும் தேவைப்படுகிறது. உடலும் உயிரும் இணைந்தாலன்றி ஒரு செயலும் நடைபெறாது. இது பூச்சி முதல் பிரும்மா முடிய எல்லோருக்கும் பொது.

No comments: